குழந்தைகள் பசியால் தவிர
அவர்கள் அழுவது எனக்கு
புரிந்ததில்லை எப்போதும்...
உலகம் அதற்குள் சலித்து விடுகிறதா
விரும்பாத சப்தங்களால் அவர்கள்
உலகு கலைவதாலா
சுவாரசியமற்ற காட்சிகளாலா
இருந்தாலும் அவர்கள்
உதடு குவித்து
கண்களில் நீர் கோர்த்து
பிஞ்சு விரல்களை மடக்கி
பந்து போல் முஷ்டி செய்து
அவர்கள் அழுகைக்கு தயாராகும்போதும்
எவ்வளவு அழகு....
அதற்காகவே அழட்டும்
சிறிது நேரம்

No comments:
Post a Comment