Monday, October 3, 2011


மீசையுள் ளாண்பிள்ளைச் சிங்கங்கள் என்கூட
வெளியினில் வாருங்கள் காணும்
நாசி நிரம்பவும் மயிர்தான் இரண்டுகால்
நடுவிலும் ஒருகூடை மயிர்தான்
ரோசங் கெடுவார்கள் என்கடை மயிர்தான் – குணங்
... குடிகொண்டாலும் என்னுயிர்க் குயிர்தான்.

--- குணங்குடி மஸ்தான் பாடல்
பெண்
=====

பெண்கள் முடிவெடுத்துவிட்டால் முடிவெடுத்ததுதான்
காதலில் விழுந்துவிட்டால் விழுந்துவிட்டதுதான்

யார் சொல்லியும் கேட்பதில்லை
அவளுக்கு சூழலும் புரிவதில்லை

அவளைப்போல் ஆணால் காதலிக்கவும் முடிந்ததில்லை.
கிடைத்தால் கூடையிலும் சுமந்து செல்வாள்
கிடைக்காவிட்டால் தென்முனையில் யுகமாக தவம்புரிவாள்
இழந்தால் முலைஅரிந்து மதுரையையும் எரிப்பாள்

பெண்கள் முடிவெடுத்துவிட்டால் முடிவெடுத்ததுதான்
வீழ நினைத்தால் யாரும்தயங்கும் படுபாதாளத்திலும் வீழ்வாள்.
See More

Search This Blog

Pages

Followers

About Me

My photo
Madurai, Tamilnadu, India
dpaprem@yahoo.com