கீத கோவிந்தம் (ஜெயதேவர்)
சகியே; இங்கு கொண்டுவா அவனை
அந்த சபலக்காரனை,
சந்தோஷத்தை பகிர்ந்தளிக்கும் தாராளக்காரனை
காமனின் சிலிர்க்க வைக்கும் கற்பனைகளை
உயிர்ப்பிக்கும் வித்தையறிந்தவனை.
இங்கு கொண்டுவா;
கொடிகளின் ரகசிய மணவறையில்
இருள் கவிந்த வேளையில்
இங்குமங்கும் பார்த்தபடி
அச்சத்தைத் தொலைத்தபடி
நானிருந்தும் சத்தமிட்டு சிரிக்கும் அவன்
நாணம் தரும் வித்தைகளில் முன்னேற
எத்தனை ஆசையெனக்கு.
என் கண்ணனை துய்க்கவிடு
மலர்கள் நிறைந்த
என் பள்ளியறையில் நான் கிடக்க
மெதுவே என்மீது சாயும் அவன்
படபடக்கும் என் இதயத் துடிப்பையும் செவியுறுவான்
பரஸ்பர தழுவலில்
திருத்தப் பிணைப்பாக நம்மை ஒன்றிணைப்பான்
கள்ளூறும் இதழைப் பருக நான் எத்தனிக்க
அவனோ என்னிதழ்களில் தேனெடுப்பான்
களைப்பில் என் இமைகள் கவியும் வேளை
கன்னங்களில் கூசும் முத்தங்களிட்டு
என்னை எழுப்புவான் அவன்.
ஒளிவு மறைவற்ற காதலின் வியர்வையில்
என் உடல் நனைந்திருக்கையில்
என் மனதின் சுகத்தைவிட
மென்மையாய் அவனிருப்பான்.
கூடல் பொழுதின் மென்மகன் அவனை
சுகிக்கவிடு, சகியே!
என் காம இச்சையின்
உயரும் துடிப்பை அவனறிவான்.
கட்டுப்படுத்தவியலா என் ஆனந்தச் சத்தம்
குயிலின் குரலைப் போன்றிருந்து பின்
ஒரு புறாவின் குரலாய்
அடங்கித் தேய்கிறது.
போதுமென்று அவன் எச்சரித்தபோதும்
எனக்குத் தெரியும்
காதல் பாடத்தின் கற்பித்தல் அனைத்தையும்
தாண்டிவிடுவேன் நான்.
அவன் நகக் குறிகளை நான்
கர்வத்துடன் அணிந்துகொள்வேன்
காதலின் சின்னமாக.
”அனுபவங்கள் அறிதல்கள் நித்ய சைதன்ய யதி” புத்தகத்திலிருந்து – மொழியாக்கம் சூத்ரதாரி
இங்கு கொண்டுவா;
கொடிகளின் ரகசிய மணவறையில்
இருள் கவிந்த வேளையில்
இங்குமங்கும் பார்த்தபடி
அச்சத்தைத் தொலைத்தபடி
நானிருந்தும் சத்தமிட்டு சிரிக்கும் அவன்
நாணம் தரும் வித்தைகளில் முன்னேற
எத்தனை ஆசையெனக்கு.
என் கண்ணனை துய்க்கவிடு
மலர்கள் நிறைந்த
என் பள்ளியறையில் நான் கிடக்க
மெதுவே என்மீது சாயும் அவன்
படபடக்கும் என் இதயத் துடிப்பையும் செவியுறுவான்
பரஸ்பர தழுவலில்
திருத்தப் பிணைப்பாக நம்மை ஒன்றிணைப்பான்
கள்ளூறும் இதழைப் பருக நான் எத்தனிக்க
அவனோ என்னிதழ்களில் தேனெடுப்பான்
களைப்பில் என் இமைகள் கவியும் வேளை
கன்னங்களில் கூசும் முத்தங்களிட்டு
என்னை எழுப்புவான் அவன்.
ஒளிவு மறைவற்ற காதலின் வியர்வையில்
என் உடல் நனைந்திருக்கையில்
என் மனதின் சுகத்தைவிட
மென்மையாய் அவனிருப்பான்.
கூடல் பொழுதின் மென்மகன் அவனை
சுகிக்கவிடு, சகியே!
என் காம இச்சையின்
உயரும் துடிப்பை அவனறிவான்.
கட்டுப்படுத்தவியலா என் ஆனந்தச் சத்தம்
குயிலின் குரலைப் போன்றிருந்து பின்
ஒரு புறாவின் குரலாய்
அடங்கித் தேய்கிறது.
போதுமென்று அவன் எச்சரித்தபோதும்
எனக்குத் தெரியும்
காதல் பாடத்தின் கற்பித்தல் அனைத்தையும்
தாண்டிவிடுவேன் நான்.
அவன் நகக் குறிகளை நான்
கர்வத்துடன் அணிந்துகொள்வேன்
காதலின் சின்னமாக.
”அனுபவங்கள் அறிதல்கள் நித்ய சைதன்ய யதி” புத்தகத்திலிருந்து – மொழியாக்கம் சூத்ரதாரி