Monday, October 3, 2011


மீசையுள் ளாண்பிள்ளைச் சிங்கங்கள் என்கூட
வெளியினில் வாருங்கள் காணும்
நாசி நிரம்பவும் மயிர்தான் இரண்டுகால்
நடுவிலும் ஒருகூடை மயிர்தான்
ரோசங் கெடுவார்கள் என்கடை மயிர்தான் – குணங்
... குடிகொண்டாலும் என்னுயிர்க் குயிர்தான்.

--- குணங்குடி மஸ்தான் பாடல்
பெண்
=====

பெண்கள் முடிவெடுத்துவிட்டால் முடிவெடுத்ததுதான்
காதலில் விழுந்துவிட்டால் விழுந்துவிட்டதுதான்

யார் சொல்லியும் கேட்பதில்லை
அவளுக்கு சூழலும் புரிவதில்லை

அவளைப்போல் ஆணால் காதலிக்கவும் முடிந்ததில்லை.
கிடைத்தால் கூடையிலும் சுமந்து செல்வாள்
கிடைக்காவிட்டால் தென்முனையில் யுகமாக தவம்புரிவாள்
இழந்தால் முலைஅரிந்து மதுரையையும் எரிப்பாள்

பெண்கள் முடிவெடுத்துவிட்டால் முடிவெடுத்ததுதான்
வீழ நினைத்தால் யாரும்தயங்கும் படுபாதாளத்திலும் வீழ்வாள்.
See More

Wednesday, September 21, 2011


இறுதிக் குறிப்பு:

முடிவெடுத்துவிட்டேன்
அனைத்திற்க்கும் முற்றுப்புள்ளி 
முடிவெடுத்டுவிட்டேன்

இனி எவரும் நிராகரிக்க முடியாத 
இடத்திற்கு செல்வதென.

அர்த்தமற்று நிகழும் சம்பவங்களுக்கும் 
நில்லாது ஓடும் பைத்தியக்காரத்தனத்துக்கும்
அங்கீகாரம் தேடும் விளையாட்டுக்கும்

யார் மேலும் குற்றம் சொல்ல விரும்பவில்லை
எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் தவறாக போனதால்
என் மேலும் குற்றம் சொல்ல நினைக்கவில்லை


சிறு நகை தோன்றுகிறது
என்னுள் இக்கணத்திலும்.

எங்கோ ஒரு மூலையில் 
கொடூர நகைப்புடன்
கலைத்து ஆடும் விதிக்கு 
இந்த முடிவு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 

யாரிடம் சொல்லத் துடிக்கிறேன் இதையெல்லாம்
நானே இல்லையென்றானபின் எவர்தான் அது?

நானே எழுதிய கடிதத்தை 
கடைசியாக படித்துப் பார்க்கிறேன்
ஒரு பிழையும் இல்லை
முதல் முறை என் வாழ்வில்.

Sunday, September 4, 2011

மீள் வாசிப்பு
புது புத்தகத்தின் வாசனையை
பள்ளிக் குழந்தை முகர்வது போல் 
ஆரம்பத்தில் எனை முகர்ந்தாய் 
முகர்ந்தாய்.. முகர்ந்து கொண்டிருந்தாய் 
உன் குழந்தை மனம் கண்டு மகிழ்ந்தேன். 

 பின் நேரம் கிடைத்தால் 
 மெதுவாக எனை புரட்டி 
 வாசித்தாய் 
 என் உள்ளமும் உன் உள்ளமும் 
இணைந்து தாள்கள் படபடக்க 
 ஒரே உலகில் வாழ்ந்தோம். 

 பயணத்தின் போதும் 
உண்ணும் போதும் 
உறங்கும் போதும் 
என்னையே அணைத்துக் கிடந்தாய். 

 பின் சில நேரம் சலித்து எனை
 ஓரத்தில் மடித்து வைத்தாய்.. 
 உன் வாழ்வு சலிக்கும் நேரத்தில் மட்டும் 
பின் மீண்டும் தொடர்ந்தாய்.. முடித்தாய் 

 பரணில் யாரும் தொடாமல் 
இப்போது கரங்களின் 
ஸ்பரிசத்துக் காகவேணும் 
காத்துக் கிடக்கிறேன். 

அதோ இன்னொரு புத்தகம் 
புதிய வாசம் கண்டுகொண்டாய்
மாறிவிட்டாய் 
உலகில் புத்தகங்களுக்கா பஞ்சம் 
புத்தக வாசமே அறியாதவர்கள் 
சூழ்ந்த உலகில் நீ மேல்தான். 

 எனக்குத் தெரியும் 
என் ஆன்மா அறியும் 
நீ என்னை என்றேனும் 
 மீள்வாசிப்புக்கு தேடுவாய் என்று 
அப்போது நீ கண்டு கொள்வாய் 
வரிகளுக்கிடையில் கிடக்கும் 
 என் ஆன்மாவை.

Sunday, August 14, 2011



ஓஷோ சொன்ன ஜோக்

இளம் அறுவைசிகிச்சை மாணவர்களுக்கு பேராசிரியர் பாடம் எடுத்தார். “மாணவர்களே அறுவை சிகிச்சை நிபுணன் ஆவதற்கு அருவறுப்பு அடையாத மனநிலையும் மிகுந்த கவனம் தேவை. சரி உங்களுக்கு ஒரு சோதனை. நான் இப்போது செய்வதை கவனமாகவும் அருவருப்பு அடையாமலும் கவனித்து அதேபோல் செய்யவேண்டும்.”

டேபிளில் போர்த்தியிருந்த துணியை விலக்கினார். பாடம் செய்யப்பட்ட இறந்த உடல் நிர்வாணமாக இருந்தது. கையில் உறையை மாட்டிக்கொண்டு பிணத்தின் குதத்திற்குள் விரலைவிட்டு வெளியே எடுத்து அப்படியே தன் வாயில் வைத்து சப்பினார்.

மாணவர்கள் உறைந்தனர், அருவருப்பின் உச்சத்திற்கே சென்றார்கள்.

“மாணவர்களே நான் செய்ததைப் போன்றே யார் செய்ய முன்வருகிறீர்கள்?” பேராசிரியர் கேட்டார்.

ஒரு அவசரகுடுக்கை மாணவன் மட்டும் கையை தூக்கினான்.அவனும் கையில் புதிய உறையை மாட்டிக் கொண்டு அதேபோல் விரலை விட்டு எடுத்து வாயில் வைத்து சப்பினான்.

பேராசிரியர்.”வெல்டன். நான் உன்னை பாராட்டுகிறேன். உனது தைரியத்திற்காக. இருந்தாலும் உனக்கு கவனம் பத்தாது. உன்னால் நிபுணனாக முடியும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் நான் விட்டது ஒரு விரல் சப்பியது வேறொரு விரலை.

Thursday, August 11, 2011

அழட்டும் குழந்தைகள்


குழந்தைகள் பசியால் தவிர
அவர்கள் அழுவது எனக்கு
புரிந்ததில்லை எப்போதும்...

உலகம் அதற்குள் சலித்து விடுகிறதா

விரும்பாத சப்தங்களால் அவர்கள்
உலகு கலைவதாலா

சுவாரசியமற்ற காட்சிகளாலா

இருந்தாலும் அவர்கள்

உதடு குவித்து
கண்களில் நீர் கோர்த்து
பிஞ்சு விரல்களை மடக்கி
பந்து போல் முஷ்டி செய்து

அவர்கள் அழுகைக்கு தயாராகும்போதும்
எவ்வளவு அழகு....

அதற்காகவே அழட்டும்
சிறிது நேரம்

அழகிய உலகம்


குழந்தைகளின் உலகே தனியானது

எவ்வளவு முயற்சித்தாலும்
நம்மால் அதில்
எட்டிக்கூட பார்க்க முடிவதில்லை

தொட்டிலில் விழித்திருந்து
தனிமையில்
உதடுகளில் நீர் வழிய
இரு கைகளிலும் காற்றை
இறுக பற்றிக் கொண்டு
உடல் முழுவதும் சிரிப்பாக
புரியாத மொழியில்
எந்த தேவதையுடன் உரையாடுகிறார்கள்

குழந்தைகளின் உலகே அலாதியானது.

Search This Blog

Pages

Followers

About Me

My photo
Madurai, Tamilnadu, India
dpaprem@yahoo.com