Thursday, August 11, 2011

அழகிய உலகம்


குழந்தைகளின் உலகே தனியானது

எவ்வளவு முயற்சித்தாலும்
நம்மால் அதில்
எட்டிக்கூட பார்க்க முடிவதில்லை

தொட்டிலில் விழித்திருந்து
தனிமையில்
உதடுகளில் நீர் வழிய
இரு கைகளிலும் காற்றை
இறுக பற்றிக் கொண்டு
உடல் முழுவதும் சிரிப்பாக
புரியாத மொழியில்
எந்த தேவதையுடன் உரையாடுகிறார்கள்

குழந்தைகளின் உலகே அலாதியானது.

3 comments:

தேடுதல் said...
This comment has been removed by the author.
Anonymous said...

ரொம்ப அழகாயிருந்தது... குழந்தைகளின் உலகை எதர்த்தாமாக சொல்வதற்கு தனி திறமை வேண்டும்... நன்றி வாழ்த்துக்கள் !

தேடுதல் said...

அசரீரியே நன்றி. இதுவே எனது வலைப்பூவில் வந்த முதல் ஒலி.

Post a Comment

Search This Blog

Pages

Followers

About Me

My photo
Madurai, Tamilnadu, India
dpaprem@yahoo.com