குழந்தைகளின் உலகே தனியானது
எவ்வளவு முயற்சித்தாலும்
நம்மால் அதில்
எட்டிக்கூட பார்க்க முடிவதில்லை
தொட்டிலில் விழித்திருந்து
தனிமையில்
உதடுகளில் நீர் வழிய
இரு கைகளிலும் காற்றை
இறுக பற்றிக் கொண்டு
உடல் முழுவதும் சிரிப்பாக
புரியாத மொழியில்
எந்த தேவதையுடன் உரையாடுகிறார்கள்
குழந்தைகளின் உலகே அலாதியானது.
3 comments:
ரொம்ப அழகாயிருந்தது... குழந்தைகளின் உலகை எதர்த்தாமாக சொல்வதற்கு தனி திறமை வேண்டும்... நன்றி வாழ்த்துக்கள் !
அசரீரியே நன்றி. இதுவே எனது வலைப்பூவில் வந்த முதல் ஒலி.
Post a Comment