Wednesday, September 21, 2011


இறுதிக் குறிப்பு:

முடிவெடுத்துவிட்டேன்
அனைத்திற்க்கும் முற்றுப்புள்ளி 
முடிவெடுத்டுவிட்டேன்

இனி எவரும் நிராகரிக்க முடியாத 
இடத்திற்கு செல்வதென.

அர்த்தமற்று நிகழும் சம்பவங்களுக்கும் 
நில்லாது ஓடும் பைத்தியக்காரத்தனத்துக்கும்
அங்கீகாரம் தேடும் விளையாட்டுக்கும்

யார் மேலும் குற்றம் சொல்ல விரும்பவில்லை
எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் தவறாக போனதால்
என் மேலும் குற்றம் சொல்ல நினைக்கவில்லை


சிறு நகை தோன்றுகிறது
என்னுள் இக்கணத்திலும்.

எங்கோ ஒரு மூலையில் 
கொடூர நகைப்புடன்
கலைத்து ஆடும் விதிக்கு 
இந்த முடிவு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 

யாரிடம் சொல்லத் துடிக்கிறேன் இதையெல்லாம்
நானே இல்லையென்றானபின் எவர்தான் அது?

நானே எழுதிய கடிதத்தை 
கடைசியாக படித்துப் பார்க்கிறேன்
ஒரு பிழையும் இல்லை
முதல் முறை என் வாழ்வில்.

No comments:

Post a Comment

Search This Blog

Pages

Followers

About Me

My photo
Madurai, Tamilnadu, India
dpaprem@yahoo.com