நிர்வாணம்
Blown Out - Nirvana |
ஓர் நாள் முடிவுடன் எழுந்தேன்
போதும் இந்த விளையாட்டு என துணிந்தேன்
சான்றோன் என சொன்னவரை அணுகி
”சலித்துவிட்டேன், அர்த்தமற்ற
நகல் எடுக்கும் வாழ்வில் பொருளற்றுவிட்டேன்
இருளில் தடம் தெரியாமல் நிற்கிறேன்.
வாழ்வின் பொருள்தான் என்ன?”
என வினவினேன்.
சற்றே கூர்ந்து பார்த்த அவர் மிரண்டு
அங்கே ஒரு அருகர் இருக்கிறார் அவரிடம் செல்
உனக்கு நிச்சயம் வெளிச்சம் அளிப்பார் என்றார்.
அருகரை தேடி அடைந்தேன்
புத்தரின் அழகில் மென்மையில் நிதானத்தில்
ஒரு கணம் ஸ்தம்பித்தேன்.
அவரிடம் மெதுவாக தீவிரமாக
மீண்டும் அதையே கேட்டேன்
”சான்றோன் வெளிச்சம் அளிப்பீர்கள் என்றான்”
என சொன்னேன்.
மெதுவாக நடந்து கொண்டு
தாமரை மொட்டை விரலில் சுழற்றிக் கொண்டு
மென்மையாக புன்னகைத்து
என்மேல் பார்வையை கவிழ்த்து
“உனக்கு நீயே ஒளியாய் இரு” என்றார்.
அக்கணமே அமர்ந்தேன்
ஆண்டுகள் பல சென்றன.
பேச்சில்லை உரையில்லை
மன இருள் விலகி வெளிச்சம் பரவியது
தெளிவடைந்து ஓர் நாள் மீண்டும்
மெளவுணம் கலைத்தேன்
நன்றியுடன் வணங்கி புத்தரை வினவினேன்
அடுத்து என்ன என்று?
மீண்டும் அழகாக புன்னகைத்து
”ஊதி அணைத்து விடு” என்றார்.
நானும் புன்னகைத்துக் கொண்டேன்.
விடுதலை அடைந்தேன்.
போதும் இந்த விளையாட்டு என துணிந்தேன்
சான்றோன் என சொன்னவரை அணுகி
”சலித்துவிட்டேன், அர்த்தமற்ற
நகல் எடுக்கும் வாழ்வில் பொருளற்றுவிட்டேன்
இருளில் தடம் தெரியாமல் நிற்கிறேன்.
வாழ்வின் பொருள்தான் என்ன?”
என வினவினேன்.
சற்றே கூர்ந்து பார்த்த அவர் மிரண்டு
அங்கே ஒரு அருகர் இருக்கிறார் அவரிடம் செல்
உனக்கு நிச்சயம் வெளிச்சம் அளிப்பார் என்றார்.
அருகரை தேடி அடைந்தேன்
புத்தரின் அழகில் மென்மையில் நிதானத்தில்
ஒரு கணம் ஸ்தம்பித்தேன்.
அவரிடம் மெதுவாக தீவிரமாக
மீண்டும் அதையே கேட்டேன்
”சான்றோன் வெளிச்சம் அளிப்பீர்கள் என்றான்”
என சொன்னேன்.
மெதுவாக நடந்து கொண்டு
தாமரை மொட்டை விரலில் சுழற்றிக் கொண்டு
மென்மையாக புன்னகைத்து
என்மேல் பார்வையை கவிழ்த்து
“உனக்கு நீயே ஒளியாய் இரு” என்றார்.
அக்கணமே அமர்ந்தேன்
ஆண்டுகள் பல சென்றன.
பேச்சில்லை உரையில்லை
மன இருள் விலகி வெளிச்சம் பரவியது
தெளிவடைந்து ஓர் நாள் மீண்டும்
மெளவுணம் கலைத்தேன்
நன்றியுடன் வணங்கி புத்தரை வினவினேன்
அடுத்து என்ன என்று?
மீண்டும் அழகாக புன்னகைத்து
”ஊதி அணைத்து விடு” என்றார்.
நானும் புன்னகைத்துக் கொண்டேன்.
விடுதலை அடைந்தேன்.
No comments:
Post a Comment