Wednesday, October 24, 2012

சிலப்பதிகாரம்

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத
தோற்றம் மாய்வான்.

பொறை மலி பூம் புன்னைப் பூ உதிர்ந்து நுண் தாது
போர்க்கும் கானல்.

நிறை மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த

உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே
தீர்க்கும் போலும்.
-------------------------------------------------------------------------------
காவிரியை நோக்கி பாடும் கானல் வரி பாடல் -- சிலப்பதிகாரம்

கடற்கரையிலே மேய்கின்ற வலம்புரிச் சங்குகள் அம்மணலிலே தோய்ந்து உழுதலால் வருக்கள் (சிறு குழிகள்) ஏற்படும். அவ்வடுக்களை அக்கடற்கரையிலே உள்ள புன்னை மரங்கள் தமது செழுமையான பூக்களில் இருந்து உதிர்ந்த, நுண்ணிய பூந்தாதுக்களால் மூடி மறைக்கும். அத்தகைய கானலிடத்தே நிற்கின்ற இத்தலைவியின் முழுமதி போன்ற ஒளி பொருந்திய முகத்திலே கயல்போன்ற கண்கள் செய்த காம நோயாகிய வடுவினை வேறு மருந்து எதனாலும் போக்க முடியாது. தேமல் படர்ந்த அவளது மென்மையான முலைகள் மட்டுமே அந்நோயைப் போக்கும் சக்தியுடையன போலும். {சங்குகள் செய்த வடுக்களைப் பூந்தாதுக்கள் மூடி மறைக்கலாம். ஆனால் அவள் கண்கள் செய்த நோய் தீர அவள் முலைகள் தலைவன் மார்பிலே தோய்ந்து சூடான ஒற்றடம் பெருவதைத் தவிர வேறு மருந்து இல்லை போலும்}

No comments:

Post a Comment

Search This Blog

Pages

Followers

About Me

My photo
Madurai, Tamilnadu, India
dpaprem@yahoo.com