ஆன்மீகமும் அறிவியலும்
மனிதர்களை இரு வகையினராக பிரிக்கலாம். அறிவியலாளர் மற்றும் ஆன்மிகர் என்று. அறிவியலாளர்கள் வெளியே ”நிரூபிக்கப்படுமாறு” தேடுகிறார்கள். ஆன்மீகர் உள்ளே திருப்தி அடையுமாறு தேடுகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் உணர்வு ரீதியாக புரிந்து கொள்பவர்கள். பார்வையை பகிர்ந்து கொள்பவர்கள். அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டே இருப்பவர்கள். உண்மையானவர்கள். உள்ளத்தில் எப்போதும் தீரா தாகத்தைக் கொண்டவர்கள். வாழ்பவர்கள். இவர்களே மனித சிந்தனை வளர்ச்சியில் அடுத்த பரிணாமத்தை முன்வைப்பவர்கள்.
இரு நிலைகளுக்கு இடையில் எப்போதும் பெரும்பான்மையானோர் இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்களையும் இரண்டாக பிரிக்கலாம். மதவாதிகள் மற்றும் நாத்திகவாதிகள். இவர்கள் எதையும் தேடுவதில்லை. இவர்கள் தற்காலிகமானவர்கள். தனக்கென்று சுயமதிப்பீடு ஏதும் இல்லாதவர்கள். ”சமூக வசதி”யே இவர்களின் இலக்கு. பொதுவாக “நுகர்வோர்” என்று உலகில் அழைக்கப் படுகின்றனர். மதவாதிகள், ஆன்மீகம் வளர்ந்து உறைந்து போன “நிலையங்களில்” (மதங்களில்) தங்கி விடுகின்றனர். ஆன்மீகத்தை எப்போதும் தவறாகவே புரிந்து கொள்பவர்கள். அதனால் மூடநம்பிக்கைகளையும், சடங்குகளையும் உற்பத்தி செய்த வண்ணம் இருப்பவர்கள். இவர்களிலிருந்தே தொடர்ந்து ”போலி ஆன்மீகவாதிகளும்” முளைத்து அவர்களை திருப்தி செய்த வண்ணம் இருப்பவர்கள். இந்த வகையினரே மதசண்டைகளுக்கு காரணமானவர்கள்.
நாத்திகம் பேசுவோர்கள் மதவாதிகளை தாக்குவதில் நிறைவு கொள்கின்றனர். ”உலகில் அனைத்து மதங்களும் இல்லாமல் ஆனபின் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று நாத்திகவாதிகளை கேட்டால் விழிப்பார்கள். அவர்களுக்கு தகர்க்க வேண்டிய பெறும்சுவர் அவர்கள் முன் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த சுவற்றுக்குப் பின்னால் என்ன என்பதற்கு அவர்கள் பார்வை செல்வதே இல்லை. இந்த இருவர்களுக்கும் தேடுதலே இருப்பதில்லை. அடுத்த நகர்வு என்பதே இல்லை. நிலைபெற்றுப் போனவர்கள். தேங்கிய குட்டைகள். நாத்திகர்களுக்கும் மதவாதிகளுக்கும் எதிலும் ”அக்கறை” இருப்பதில்லை. குழுவாகவே இயங்குபவர்கள் தனித்து இயங்க முடியாதவர்கள்.
No comments:
Post a Comment